Pages

Friday, 24 February 2017

சொத்து வேண்டாம்: தீபா

ஜெயலலிதாவின் சொத்துக்களை நான் எதிர்பார்க்கவில்லை என ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளருக்கு பேட்டி அளித்த தீபா, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறோம் என தெரிவித்தார். அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஏற்க மாட்டார்கள் எனவும் தீபா கூறினார். தீபக் நேற்று கூறிய கருத்து குறித்து பேசிய தீபா, தீபக்கை பின்னணியில் இருந்து யாரோ இயக்குகிறார்கள். அவர் பேசியதில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது என்றார். ’போயஸ் கார்டன் இல்லத்திற்கு நானும், தீபாவுதான் சொந்தக்காரர்கள்’ என தீபக் குறியது பற்றி கருத்து தெரிவித்த தீபா, ஜெயலலிதாவின் சொத்துக்களை நான் எதிர்பார்க்கவில்லை என கூறினார்.

No comments:

Post a Comment