Monday, 2 November 2015

Jallikattu (Veera Vilayattu) Photo Exhibition Opening Ceremony Stills










Veera Vilayattu
The Game of Valour

Jallikattu, or the Indian bull taming sport, had been an integral part of the life of the people of Tamil Nadu since the Tamil classical period. It required the bravest of the brave to take on the well-fed and well-bred bull, tame him and win laurels and the people's hearts. J Suresh, a renowned, photojournalist is organizing a comprehensive and productive photography exhibition “Veera Vilayattu” for the first time in India as a part of the tradition and culture of rural Tamil Nadu.
The exhibition will be inaugurated by Kamal Haasan on 2nd November 2015 at 10.30 AM  and the exhibition will remain open till November 8, 2015, daily 10am to 8pm. The venue of the exhibition is Lalit Kala Akademi. Greams Road, Chennai-6.

This exhibition showcases Jallikattu in all its glory and bravery and dedicates to salute the beast and the brave, as well as the people who loved and treated the animal as a precious member of their family, and those who thronged the rustic venues every year to celebrate the ultimate showcasing of courage and sportsmanship.

மீனாட்சியுடன் லிப் லாக்கா???? அலறி ஓடிய ஹீரோ... காட்டுக்குள் திகைத்து நின்ற படக்குழு..





இயக்குனர் முரளி கிருஷ்ணா ‘மிரண்டவன்’ படத்தை அடுத்து  நேர்முகம் என்னும் படத்தை இயக்குகிறார்.  ஹீரோவாக புதுமுகம் ரஃபி நடிக்கிறார், அவருக்கு ஜோடியாக  மீரா நந்தனும், மீனாட்சியும் நடிக்கின்றனர். மீரா நந்தன் வெகு நாட்களுக்குப் பிறகு இப்படத்தின் கதையில் ஈர்க்கப்பட்டு நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்”.

ஹைடெக் பிக்சர்ஸ் சார்பாக  ரஃபி தயாரிக்கிறார். நேர்முகத்தில் ஏழு ஜோடிகள் காட்டுக்குள் படும் பாட்டை வித்தியாசமான முறையில் படமாக்கியுள்ளார் இயக்குனர். படத்தில் பாண்டியராஜன், ஜின்னா, சிசர் மனோகர், நெல்லை சிவா மற்றும் பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர்.
 மனிதர்கள் மனரீதியாக பாதிக்கப்படும் விஷயங்களை சொல்லும் படம் தான் இந்த ’நேர்முகம்’.  அப்படி பாதிக்கப்பட்டவர்கள் தீர்வுக்காக  எங்கு செல்கிறார்கள்? அவர்களுக்கு என்ன நேர்கிறது? என்பதை காதல், செண்டிமெண்ட், த்ரில்லர், ஆக்‌ஷன், கிளாமர் கலந்து  செம  கமர்சியல் மசாலாவாக உருவாகி வருகிறது.

 இளைஞர்களையும் , காதலர்களையும் டார்கெட் வைத்து உருவாக்கப்படும் இப்படம் குடும்பங்களையும் சுண்டி இழுக்குமாம்.
காட்டுக்குள் மாட்டிக்கொள்ளும் முக்கிய ஜோடிகளாக ரஃபியும் மீனாட்சியும் நடிக்கின்றனர். அவர்கள் இருவரும் அடர்ந்த காட்டுக்குள் இக்கட்டான சூழலில் மாட்டிக்கொள்ள அதிலிருந்து தப்பிக்க ஒரு பெரிய போராட்டமே நடத்துகின்றனர். அந்த வாழ்வா சாவா நிமிடங்களில் ஒரு அழுத்தமான முத்தக் காட்சி இருந்தால் நன்றாக இருக்குமென இயக்குனர் முரளி கிருஷ்ணா முடிவெடுத்தார். கதை சொல்லும்போது இக்காட்சி மீனாட்சியிடம் சொல்லப்படாததால் முதலில் அவரிடம் சொல்லி அவர் சம்மதம் வாங்குவது எனவும், சம்மதித்தால் லிப்லாக் காட்சி வைத்துவிடலாம் எனவும் முடிவு செய்யப்பட்டது.

 இந்த இடத்தில் வைக்கப்படும் லிப்லாக் காட்சி சத்தியமாக விரசமாக இருக்காது என அவரிடம் விளக்குவதற்கு என உதவி இயக்குனர் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது. அவர்களும் மீனாட்சியிடம் சென்று விபரத்தை விளக்க,’ மீனாட்சியோ வெடிக்கக் காத்திருந்த வெய்யக் காலத்து பஞ்சி ஓலக்காத்து வீசியதும் ஊரெல்லாம் பரவி பத்திக்குமே அந்த மாதிரி காட்சிக்குத் தேவைப்பட்டால் கழுத்தை வெட்டிக்கூட வீசுவேன் என மீனாட்சி வீராவேசம் பேச, பஞ்சைப் பத்த வச்ச சந்தோசத்தோட உதவி இயக்குனர் குழு தாய்க் கோழியிடம் ஓடியது.

அடடா, “லிப்லாக் சீன் பின்னிடும் என அபார சந்தோசத்தோட இயக்குனர், ஹீரோவை வரவச்சி சீனை விளக்க, வில்லங்கத்தை விலைகொடுத்து வாங்கின மாதிரி பதறிப் போனார் ஹீரோ. சார் லிப்லாக்கா? ஆளை விடுங்க.. எப்படியாவது இதை இல்லாம பாத்துக்கோங்க என பதற்றமாய் பறஞ்சியிருக்கிறார். ஹீரோயினும் தன் பங்குக்கு சமாதானம் செய்திருக்கிறார். ஆனால் எதுக்கும் மசியாத ஹீரோவோ அமுக்கமாய் ரூமுக்குள் போய் அமுங்கிக்கொண்டார்.  ஹீரோவின் இந்த காரியத்தால் மொத்த டீமும் பகீராகி நின்றிருக்கிறது.  கிடைச்ச கேப்புல கெடா வெட்டுற ஆர்யாக்களுக்கு மத்தியில் லிப்லாக்குக்கு காட்டுக்குள் காததூரம் ஓடிப்போற ஹீரோவா? அதுவும் ஹீரோயினே ஓகே என டிக் அடிச்ச பிறகும்…? என்னடா இது? சினிமாவுக்கு வந்த கலிகாலம் என விக்கித்து நின்றது மொத்த டீமும். (கவனிக்க: முத்தத்தால் விக்கித்துப்போன மொத்த டீம்! என ரைமிங்கா டைட்டில் வைக்கலாம்)

சரி ஹீரோயினுக்குத்தான் பிரச்சனை.. இவருக்கென்ன? என இயக்கமும் ரூமுக்குள் சென்று கலக்கத்தில்  கேட்க, ஹீரோவோ, சார் நான் கல்யாணமானவன், வீட்டில் டைவர்ஸ் வரைக்கும் போயிடுவாங்க. படம்  நடிக்கணும் என்பது என் கனவு.. அதனாலத்தான் தயாரிச்சி நடிக்க வந்திருக்கேன். பத்து மாடியிலிருந்து குதிக்கச் சொல்லுங்க குதிக்கேன். தயவுசெய்து இது மட்டும் வேணாமே என கேட்டுக்கொள்ள, இயக்குனரும் இசைந்திருக்கிறார்.

ஹீரோ மட்டும் தயாரிப்பாளராக  இல்லாமலிருந்தால் என்னவாகியிருக்கும்? சைடில நின்றிருக்கும் வேறு ஏதாவது வெள்ளைத்தோல் போர்த்திய ஆண்மகனுக்கு  முத்த விளையாட்டின் அதிர்ஷ்டம் அடித்திருக்கும். ம்.. தயாரிப்பாளரும் அவரே ஆச்சே… என்ன பண்ண? காட்சியைத்தானே மாத்த முடியும்? காட்சி வேறு ஜோடிக்கு மாத்தப்பட, பெருமூச்சிவிட்டது பெருங்காடு.

ஒளிப்பதிவு - ஜெகதீஷ் V. விஸ்வம்
 எடிட்டிங் -  வில்சி
 தயாரிப்பு  நிர்வாகம் – தேனி  எஸ் முருகன்
தயாரிப்பு: ஹைடெக் பிக்சர்ஸ்
கதைதிரைக்கதைவசனம்பாடல்கள்இசை - முரளி கிருஷ்ணா

பழம்பெரும் நடிகரான திரு.காசிம் அவர்களை சந்தித்து நலம் விசாரித்து நலம் விசாரித்த நடிகர் சங்க நிர்வாகிகள் !!



திருச்சியில் உள்ள பழம் பெரும் நடிகரான காசிம் அவர்களை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளான பூச்சி முருகன், ஜெரால்ட், டேவிட், துரை ஆகியோர் இன்று அவருடைய வீட்டில் சந்தித்து நலம் விசாரித்தனர். திரு. காசிம் (வயது 90) அவர்கள் சமீபத்தில் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். காசிம் அவர்களின் புதல்வரான சுல்தான் (வயது 60) தம் தந்தை உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த போது நடிகர் சங்க நிர்வாகியான பொன்வண்ணன் அவர்களை அலை பேசியின் வாயிலாக தொடர்பு கொண்டு மருத்துவ செலவிற்கு நதி உதவி கோரி இருந்தார். சங்கத்தில் கலந்து பேசி ஒரு மணி நேரத்திற்குள் ரூபாய் 15,000 தருவதாக பதில் அளித்ததுடன் அன்று மாலையே பணம் நடிகர் சங்க உறுப்பினர் ஒருவரின் மூலமாக காசிம் அவர்களின் புதல்வரான சுல்தானிடம் கொடுக்கப்பட்டது . திரு. காசிம் அவர்கள் 45 வருடங்களாக தமிழ் சினிமா நடிகராகவும் , 38 வருடங்களாக நடிகர் சங்கத்தில் உறுப்பினராகவும் உள்ளார். இவர் தமிழ் திரையுலகின் ஜாம்பவான்களான புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்களுடனும் , நடிகர் திலகம் சிவாஜி அவர்களுடனும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவரது படங்களில் குறிப்பிடதக்கது கலைஞர் அவர்களின் கை வண்ணத்தில் வெளிவந்த "பூம்புகார்" என்ற திரைப்படத்தில் இளங்கோவடிகளாகவும், முதல்வர் புரட்சி தலைவி ஜெ. ஜெயலலிதா அவர்களின் திரைப்படமான "மேஜர் சந்திரகாந்த்" மற்றும் ஆச்சி மனோரம்மாவுடன் "லவ குசா" படத்திலும் நடித்திருக்கிறார். தமிழ், மலையாளம், இந்தி மொழிகளை சேர்த்து சுமார் 300 படங்களில் நடித்துள்ளார். இவர் தற்ப்போது உடல் தகுதி பெற்று வீடு திரும்பியுள்ளார். இவரை இன்று நடிகர் சங்க நிர்வாகிகள் சந்தித்து நலம் விசாரித்தனர் . இதனால் மகிழ்ச்சியடைந்த நடிகர் காசிம் புதிதாக பொறுப்பேற்றுள்ள நடிகர் சங்கத்தையும் அதன் நிர்வாகிகளையும் சிறப்பாக செயல்படுவதாக பாராட்டியுள்ளார்.