Sunday 29 January 2017

நாடாளுமன்றத்தில் திமுக குரல் கொடுக்கும்: கனிமொழி


ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நிகழ்ந்த வன்முறை மற்றும் அத்துமீறல் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப் போ‌தாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை கூடுகிறது. இதையொட்டி சுமித்ரா மகாஜன் தலைமையில் தலைநகர் டெல்லியில் இன்று அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. தொடர்ந்து நாளை மறுநாள் பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்கிறார். இந்நிலையில், சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி விவசாயிகள் பிரச்னை குறித்தும் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நிகழ்ந்த அத்துமீறல் குறித்தும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப் போ‌தாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment