Sunday 29 January 2017

வேலூரில் தீப்பற்றி எரிந்த ரசாயனத் தொழிற்சாலை


வேலூரை அடுத்த ராணிப்பேட்டையில் வேதிப்பொருள் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

தனியாருக்கு சொந்தமான இந்த ஆலையில் வேதிப்பொருட்கள் மறுசுழற்சி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று காலை ஏற்பட்ட தீ, ஆலை முழுவதும் பரவியது. ரசாயனப் பொருட்கள் கொழுந்துவிட்டு எரிந்ததால் கடுமையான புகைமூட்டம் ‌எழுந்தது. தகவல் அறிந்துவந்த தீயணைப்புப் படையினர், பல மணிநேரம் முயற்சித்து தீ பரவுவதை கட்டுப்படுத்தினர். இருப்பினும் ஆலையின் ஒருசில பகுதிகளில் தீ எரிந்து வருகிறது. தீயை முழுமையாக அணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.
தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்பட்டதா என்பது பற்றிய தகவல் இதுவரை தெரியவரவில்லை.
தனியாருக்கு சொந்தமான இந்த ஆலையில் வேதிப்பொருட்கள் மறுசுழற்சி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று காலை ஏற்பட்ட தீ, ஆலை முழுவதும் பரவியது. ரசாயனப் பொருட்கள் கொழுந்துவிட்டு எரிந்ததால் கடுமையான புகைமூட்டம் ‌எழுந்தது. தகவல் அறிந்துவந்த தீயணைப்புப் படையினர், பல மணிநேரம் முயற்சித்து தீ பரவுவதை கட்டுப்படுத்தினர். இருப்பினும் ஆலையின் ஒருசில பகுதிகளில் தீ எரிந்து வருகிறது. தீயை முழுமையாக அணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.
தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்பட்டதா என்பது பற்றிய தகவல் இதுவரை தெரியவரவில்லை.

No comments:

Post a Comment