Sunday 29 January 2017

ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பாக முதல்வரிடம் கோரிக்கை விடுத்த லாரன்ஸ்..!

கொண்டாட்டத்தில் முடிய வேண்டிய ஜல்லிக்கட்டு போராட்டம் வன்முறையில் முடிந்தது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக நடிகர் லாரன்ஸ் தெரிவித்துள்ளார். 

சென்னை மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் இன்று முதல்வரைச் சந்தித்த லாரன்ஸ் பின்னர் செய்தியாளர்களைச் சந்திக்கும் போது இதனைக் கூறினார்.  

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவச் செலவு முழுவதையும் அரசே ஏற்க வேண்டும் என்றும் முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் லாரன்ஸ் தெரிவித்தார். 

போராட்ட நோக்கத்தை திசை திருப்பும் வகையில் எழுப்பபட்ட தனித்தமிழ்நாடு உள்ளிட்ட முழக்கங்களை தாம் எதிர்த்ததாக ராகவா லாரன்ஸ் தெரிவித்தார். 

No comments:

Post a Comment