Monday 22 August 2016

ஆதரவற்ற குழந்தைகளுக்கு 'கபாலி' படத்தை திரையிட்டனர் தூத்துக்குடி - நெல்லை மாவட்டங்களின் சார்பில் விளையாட இருக்கும் 'டியூட்டி பேட்ரியாட்ஸ்' அணி



ஒரு புறம் உலகமே கபாலி படத்தின் வெற்றியை கொண்டாடி கொண்டு இருக்க, மறுபுறம் அந்த கபாலி படத்தை பார்க்க வசதியில்லாமல்  பல ஆதரவற்ற குழந்தைகள் ஏங்கி கொண்டு இருக்கின்றனர்.  அந்த ஆதரவற்றோர்களை மனதில் கொண்டு, அவர்களுக்காக கபாலி படத்தின் ஒரு சிறப்பு காட்சியை  ஆல்பர்ட் திரையரங்கில் திரையிட்டார் 'டியூட்டி பேட்ரியாட்ஸ்' அணியின் உரிமையாளர் 'ஆல்பர்ட்' முரளிதரன்.  'டியூட்டி பேட்ரியாட்ஸ்' அணியின் இணை உரிமையாளர் டாக்டர் ரவீந்திரன், அனுகிரகா தன்வந்ரி மெடிக்கல் - கல்வி - ஆராய்ச்சி மையத்தின் தளமிங் நிர்வாகி  திருமதி சுயம்பு கனி மற்றும் ரவுண்டு டேபிள் தொண்டு நிறுவனத்தின் வினய் கிராந்தி ஆகியோர் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைந்து நடத்தினர். வருகின்ற தமிழ்நாடு பிரிமியர் லீக் ஆட்டத்தில் தூத்துக்குடி - நெல்லை மாவட்டங்களின் சார்பில் விளையாட இருக்கும்  'டியூட்டி பேட்ரியாட்ஸ்' அணியின் அனைத்து வீரர்களும் இந்த சிறப்பு காட்சியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

"ஆதரவற்ற பிள்ளைகளுக்கு கபாலி படத்தை திரையிட்டது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. படம் ஆரம்பம் முதல் இறுதி வரை 5 - 7 வயது குழந்தைகள் அனைவரும் ரஜினிகாந்தை கொண்டாடிய விதத்தை பார்த்து நான் கண் கலங்கி நின்றேன்...இந்த தருணத்தை என் வாழ்நாள் முழுவதும் என்னால் மறக்க முடியாது...வெறும் விளையாட்டு மட்டுமில்லாமல் சமூதாயத்தின் மீது அக்கறை கொண்டவர்களாக எங்களது  'டியூட்டி பேட்ரியாட்ஸ்' அணி விளங்கும்..." என்று கூறினார் 'டியூட்டி பேட்ரியாட்ஸ்' அணியின் இணை உரிமையாளர் டாக்டர் ரவீந்திரன் குமரன்.

No comments:

Post a Comment