Friday 18 September 2015

பிரபல தயாரிப்பாளர் சீ.வி.குமார் இயக்கும் புதிய படம்


திருகுமரன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்டுடியோ கீரின் தயாரிப்பில்,
பிரபல தயாரிப்பாளர் சீ.வி.குமார் இயக்கும் புதிய படம்

புதிய தலைமுறை இயக்குனர்களை ஊக்குவித்து அவர்களை தனது தயாரிப்பு நிறுவனம் திருகுமரன் எண்டர்டெயின்மெண்ட் மூலமாக அறிமுகபடுத்தி தமிழ் சினிமாவில் புதிய அத்தியாத்தை உருவாக்கியவர் தயாரிப்பாளர் சீ.வீ.குமார்.

வெற்றி தயாரிப்பாளராக தன்னை நிருபித்து காட்டிய சீ.வீ.குமார் தற்போது இயக்குனராக புதிய அவதாரமெடுத்துள்ளார்.

இவர் இயக்கவிருக்கும் முதல் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சுந்திப் கிஷன் நாயகனாக நடிக்கிறார். 

திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், கே.ஈ. ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கீரின் நிறுவனமும் இணைந்து இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை தயாரிக்கிறது. ஜிப்ரான் இசையமைக்க, கோபி அமர்நாத் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். படத்தொகுப்பு லியோ ஜான் பால் மற்றும் கலை இயக்கம் கோபி ஆனந்த்.

அக்டோபர் 5ம் தேதி இப்படத்தின் படபிடிப்பு தொடங்குகிறது.

No comments:

Post a Comment