Thursday 9 February 2017

5 மணிக்கு ஓபிஎஸ், 7.30க்கு சசிகலா ஆளுநரை சந்திக்கின்றனர்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சென்னை வரும் ஆளுநரை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை 5 மணிக்கும், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா 7.30 மணிக்கும் சந்திக்க உள்ளனர்.
தமிழக அரசியலில் நாளுக்கு நாள் பரபரப்பு கூடிக் கொண்டே போகிறது. சசிகலாவுக்கு எதிராக போர்கொடி உயர்த்திய முதலமைச்சர் பன்னீர்செல்வம், சட்டப்பேரவையில் தனக்கான பலத்தை நிரூபிப்பேன் என கூறியுள்ளார். இதுவரை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக எம்எல்ஏ-க்கள் சிலர் ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளனர். அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனனும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மும்பையிலிருந்து சென்னை வரும் ஆளுநர் வித்யாசாகர் ராவை, முதலமைச்சர் பன்னீர்செல்வம் 5 மணிக்கு சந்திக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா 7.30 மணிக்கு ஆளுநரை சந்திக்கிறார்.

No comments:

Post a Comment