Sunday 12 February 2017

உயிரை கொடுத்து காப்பேன்; எடுத்த முடிவில் பின்வாங்க மாட்டேன்: சசிகலா

அதிமுக கட்சியை உயிரை கொடுத்தேனும் கட்டுக்கோப்பாக காப்பேன் எனவும், எடுத்து முடிவில் இருந்து பின்வாங்க மாட்டேன் எனவும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தெரிவித்துள்ளார்.
கூவத்தூரில் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏ-க்களுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா இரண்டாவது நாளாக ஆலோசனை நடத்தினர். பின்னர் ஆதரவு எம்எல்ஏ-க்கள் மத்தியில் பேசிய அவர், உயிரை கொடுத்தேனும் கட்சியை கட்டுக்கோப்பாக காப்பேன் என தெரிவித்தார்.
பெண் தான் என்று அச்சுறுத்த நினைத்தால் தைரியமாக எதிர்த்து நிற்பேன் என கூறிய சசிகலா, எதிரிகளின் அனைத்து சதிகளையும் முறியடிப்பேன் எனவும் தெரிவித்தார்.
கோட்டைக்கு சென்று ஜெயலலிதாவின் திட்டங்களை நிறைவேற்றுவோம் எனக் கூறிய அவர், எம்எல்ஏக்கள் அனைவரும் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். எந்த பிரச்னையையும் சமாளிக்கும் தைரியம் தனக்கு இருப்பதாக கூறிய அவர், எடுத்த முடிவில் இருந்து பின்வாங்க மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment