Thursday 16 February 2017

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் 'தீ' குளித்தார்

தீக்குளித்த தொண்டரை மருத்துவமனையில் சந்தித்து பன்னீர்செல்வம் ஆறுதல் கூறினார்.

முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாகத் தமிழக ஆளுநருக்குப் பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியதும் மனமுடைந்த காஞ்சிபுரம் அதிமுக தொண்டரான மூசா என்பவர் தீக்குளித்தார். உடல்முழுவதும் கடுமையாகத் தீக்காயம் அடைந்த அவர் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து நேராகக் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குச் சென்று அங்கு சிகிச்சை பெற்றுவரும் அதிமுக தொண்டர் மூசாவைச் சந்தித்து நலம் விசாரித்தார். அதன் பின்னர் பேசிய பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர்கள் தீக்குளிப்பு, தற்கொலை ஆகியவற்றில் ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். 

ஆட்சியமைக்க வருமாறு எடப்பாடி பழனிச்சாமியை ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைத்துள்ள நிலையில், கட்சியும், அரசும் தனியொரு குடும்பத்தின் நலனுக்கானதாக மாறிவிடக் கூடாது என பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment