Tuesday 7 February 2017

தேவை இல்லாமல் வதந்தியைப் பரப்புகின்றனர்: பண்ருட்டி ராமச்சந்திரன்

தேவையில்லாமல் சிலர் வதந்திகளைப் பரப்புகின்றனர் என அதிமுகவின் மூத்த நிர்வாகி பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.
சசிகலா பதவி ஏற்பு மற்றும் அவர் எம்எல்ஏக்கள் தலைவராகத் தேர்வு செய்தது குறித்து அதிமுகவைச் சேர்ந்த பிஎச் பாண்டியன் காலையில் செய்தியாளர்களைச் சந்த்து பேட்டியளித்த போது, கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.இந்த நிலையில் மதியம் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தனர்.அப்போது பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், தேவை இல்லாமல் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக சிலர் வதந்தியைப் பரப்புகின்றனர் என்றார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக கட்டுப்பாடாக செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment