Tuesday 7 February 2017

ஜெயலலிதாவின் மருத்துவ செலவை நான் செலுத்தவில்லை: தீபா

ஜெயலலிதாவின் மருத்துவ செலவை நான் செலுத்தவில்லை என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்று கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி இறந்தார். அவரது உடல் நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து அமெரிக்க டாக்டர் ரிச்சர்ட் பீலே மற்றும் அப்பல்லோ மருத்துவர்கள் நேற்று விளக்கமளித்தனர். அப்போது அவர்கள் ஜெயலலிதா சிகிச்சைக்கு மருத்துவ செலவு ரூ. 5.5 கோடி எனவும் அந்தத் தொகையை ஜெயலலிதா குடும்பத்தினர் செலுத்தியதாகவும் தெரிவித்தனர். இது குறித்து கருத்துத் தெரிவித்த தீபா, ஜெயலலிதாவின் மருத்துவச் செலவை தந்த குடும்பத்தினர் யார் என்று தனக்குத் தெரியவில்லை என்றும் அந்தத் தொகையை தான் தரவில்லை என்றும் கூறினார்.

No comments:

Post a Comment