Wednesday 19 August 2015

PRABA MOVIE STILLS




தமிழ்த்திரை நிறுவனம்
“பிரபா”

தமிழ்த்திரை நிறுவனம் தயாரிக்கும் “பிரபா”  என்கிற திரைப்படம் ஒரு த்ரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கிறது. இது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாகும். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக “சுவாசிகா” நடிக்கிறார். இதில் நிறைய நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் அறிமுகமாகின்றனர்.
கதாநாயகனாக – விஜயராம்,
வில்லனாக – ரஜினிபாணி,
போலீஸ் அதிகாரிகளாக – G. ராஜ்  /  போட்டோ சயின்ஸ் ரமேஷ்,
குழந்தை நட்சத்திரமாக – பேபி தமிழிசை,
ஒளிப்பதிவாளராக – S. முத்துராமலிங்கம்,
இசையமைப்பாளராக – S.J. ஜனனி,
ஆர்ட் டைரக்டராக – டிஜே,
பாடலாசிரியர்களாக – மா. மதிமாறன் /  ஸ்ரீதேவி /  சபிதா போஜன்,
பாடகியாக – சவுமியா தணிக்காசலம்,
காஸ்ட்யூம் டிசைனராக – தேன்மொழி நந்தன்,

இவர்களுடன் தென்றல் சரவணன்,   ஆடிட்டர் ஜெரால்டு ஆகியோர் அறிமுகமாகின்றனர். மற்றும், சொற்கோ,ரமேஷ் வைத்யா இருவரும் பாடல் எழுதி இருக்கின்றனர்.  V. சத்தியநாராயணன்  எடிட்டிங் செய்கிறார்.  நீண்ட நாட்களுக்கு பிறகு டாக்டர். பாலமுரளிகிருஷ்ணா              இப்படத்திற்காக ஒரு பாடல் பாடியிருக்கிறார்.
இணை தயாரிப்பு – ரஜினிபாணி, N. முருகன்.
இயக்குனர் தரணியின் உதவியாளர் நந்தன் எழுதி, தயாரித்து இயக்குகிறார்.

இத்திரைப்படத்தை பற்றி இயக்குனர் கூறும் போது: இது பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள, பெண்களுக்கும் பெற்றோர்களுக்கும் தேவையான படம். பொதுவாக பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து வெளியே வர மற்றவர்களின் உதவியை எதிர்பார்ப்பார்கள். அப்படி இல்லாமல் பெண்களே போராடி வெற்றி பெற வேண்டும் என்பதை வலியுறுத்தும் படமாக உருவாகியுள்ளது.

            இதுவரை குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்த “சுவாசிகா”    “பிரபா” திரைப்படத்தில் நவநாகரீக பெண்ணாகவும், முற்போக்கான சிந்தனை உள்ள பெண்ணாகவும், ஆபத்தான சண்டைக் காட்சிகளிலும் நடித்து அசத்தியிருக்கிறார்.           இது அவருக்கும், எங்களின் குழுவிற்க்கும் திருப்புமுனையை ஏற்படுத்தும் படம்          என்று நம்பிக்கையுடன் இயக்குனர் நந்தன் கூறுகிறார்.

No comments:

Post a Comment