Friday 24 February 2017

சேற்றில் சிக்கி தவித்த காட்டு யானை கும்கி யானைகளின் உதவியுடன் மீட்பு

முதுமலை புலிகள் காப்பத்தில் சேற்றில் சிக்கி தவித்த காட்டு யானை கும்கி யானைகளின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் அங்குள்ள அபாயரணியம் வனப் பகுதியில் உள்ள தடுப்பணையில் தண்ணீர் குடிக்க பெண் யானை வந்துள்ளது. 
அப்போது அந்த யானை சேற்றில் சிக்கிக் கொண்டு வெளியே வரமுடியாமல் உயிருக்கு போராடியதை அந்த வழியாக சென்ற வனத்துறையினர் பார்த்துள்ளனர். 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு 5 கும்கியானைகள் வரவழைக்கப்பட்டு , அவற்றின் உதவியுடன் பெண் யானை சேற்றில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது.

இதனால் அங்குள்ள அபாயரணியம் வனப் பகுதியில் உள்ள தடுப்பணையில் தண்ணீர் குடிக்க பெண் யானை வந்துள்ளது. அப்போது அந்த யானை சேற்றில் சிக்கிக் கொண்டு வெளியே வரமுடியாமல் உயிருக்கு போராடியதை அந்த வழியாக சென்ற வனத்துறையினர் பார்த்துள்ளனர். 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு 5 கும்கியானைகள் வரவழைக்கப்பட்டு , அவற்றின் உதவியுடன் பெண் யானை சேற்றில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டது. சேற்றில் சிக்கி மீட்கப்பட்ட பெண் யானை நிற்க முடியாமல் சோர்வுடன் காணப்படுவதால் அதற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

1 comment:

  1. கும்கி பரவலாக இந்தியக் கோயில்களில் காணப்படும் இயல்பான யானைகள் இல்லை.Latest Tamil News

    ReplyDelete