Wednesday 27 July 2016

நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மெருகேறி, மீண்டும் வெளியாகிறது எம்.ஜி.ஆர் நடித்த 'ரிக்‌ஷாக்காரன்'


இன்றும், என்றும், என்றென்றும் தமிழக ரசிகர்களின்  உள்ளத்தில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் ஒரு திரைப்படம்,எம்.ஜி.ஆரின்  நடிப்பில் வெளியான  'ரிக்ஷாக்காரன்' அதிரடி, காமெடி, காதல், செண்டிமெண்ட்  என அனைத்து சிறப்பம்சங்ளும்  நிறைந்த 'ரிக்‌ஷாக்காரன்', தமிழ்  திரையுலகில் அமோக வெற்றி பெற்றது மட்டுமின்றி, எம்.ஜி.ஆருக்குதமிழ்நாட்டின் சிறந்த நடிகர்என்று இந்திய அரசின் 'பாரத்' பட்டத்ததையும் பெற்று தந்திருப்பது   குறிப்பிடத்தக்கது. கடந்த 1971 ஆம் ஆண்டு வெளியான 'ரிக்‌ஷாக்காரன்' திரைப்படமானது   தற்போது நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன்  மீண்டும் தமிழகத்தில் வெளியாக  உள்ளது. சத்யா மூவிஸ் தயாரித்து வெளியிட்ட இந்த 'ரிக்‌ஷாக்காரன்'படத்தின் டிஜிட்டல்  பதிப்பை வெளியிடுகின்றனர் 'குவாலிட்டி சினிமா' நிறுவனத்தின் உரிமையாளர்கள் பி. மணி, டி.கே.கிருஷ்ணகுமார் மற்றும் 'பிலிம் விஷன்' நிறுவனத்தின் உரிமையாளர் கே. ராமு.

'ரிக்‌ஷாக்காரன்' படத்தின் அனைத்து பாடல்களும்  இன்றளவும்  எல்லா தலைமுறையினராலும் ரசிக்க கூடியதாகஇருந்து வருகிறது. அதற்கு மிக முக்கிய காரணம் 'ரிக்‌ஷாக்காரன்'   படத்தின் இசையமைப்பாளர் 'மெல்லிசை மன்னர்'எம்.எஸ்.விஸ்வநாதன். அதுமட்டுமின்றி   இந்த படத்தில் தான் மஞ்சுளா கதா நாயகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

"எம்.ஜி.ஆரின் படமானது வெளி வர போகிறது என்று தெரிந்தால் போதும், எப்படியாவது முதல் நாளுக்குரியடிக்கெட்டை நான் வாங்கி விடுவேன். அந்த அளவிற்கு எம்.ஜி.ஆரின் தீவிர பக்தன் நான். அந்த வகையில் அவர் நடிப்பில்வெளியான 'ரிக்‌ஷாக்காரன்' இன்றளவும் என் மனதில்  ஒன்றி இருக்கிறது.  விரைவில் நாம் அனைவரும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு   விழாவை கொண்டாட உள்ளோம். அந்த விழாவின் முதற் கட்டமாக இந்த  'ரிக்‌ஷாக்காரன்' படத்தை தற்போதைய நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கேற்ப மேலும் மெருகேற்றி,  எம்.ஜி.ஆருக்காக அர்ப்பணிக்க இருக்கிறோம். இந்த நவீன டிஜிட்டல் முறையில்  உருவாக்கப்பட்ட  'ரிக்‌ஷாக்காரன்'திரைப்படம்,  எம் ஜி ஆர் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்..." என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் 'குவாலிட்டி சினிமாவின்'  டி.கே. கிருஷ்ணகுமார்.

No comments:

Post a Comment